உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும்
“வளர்ச்சியின் பாதை பாலினச் சமத்துவம், சமூக நீதி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாற்று இருக்க வேண்டும் ” என்பதை ஸ்ரீனிவாசன் ராகவன் மற்றும் ரோசா ஆப்ரஹம் அவர்கள் தி ஹிந்து தமிழ் நாளிதழிலில் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.